மாறி மாறி பேசும் டோனி ரசிகர் : காவிரி விவகாரத்தில் சர்ச்சை!!

833

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகரும் இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியின் ரசிகர் ஒருவர் என்னை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் அல்ல கருணாஸ் கட்சினர் மாறி மாறி கூறி வருகிறார்.

தமிழகத்தில் தற்போது பூதாகரமாக கிளம்பியிருக்கிறது காவேரி மேலாண்மை விவகாரம் தான், இதற்கிடையில் நேற்று சென்னை-கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நடைபெறக் கூடாது என சென்னை அண்ணாசாலையில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகரான சரவணன், போராட்டக்காரர்கள் என்னை தாக்கியதாகவும், என்னை தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியினர் தான் என்றும் கூறியிருந்தார். அது தொடர்பான வீடியோ வைரலாக பரவியது.

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அந்த நேரத்தில் அவர்கள் என்னை திடீரென தாக்கினர். அப்போது நான் கட்சி கொடியை சரியாக பார்க்காமல், நாம் தமிழர் கட்சியினர் தான் தாக்கிவிட்டனர் என்று கூறியிருந்தேன்.

ஆனால் வீடியோக்களை பார்த்த போது கருணாஸ் கட்சியினரைச் சேர்ந்தவரே என்னை தாக்கியுள்ளனர் என்பது தெரியவந்ததாக பதிவேற்றம் செய்துள்ளார்.