நாட்டுக்கே பேராபத்து : எச்சரிக்கை விடுத்த நடிகர் ரஜினிகாந்த்!!

542

வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.

சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும், ஒரு வீடியோ ஒன்றையும் அதில் இணைத்துள்ளார். அதில், சீருடையில் இருக்கும் காவலர், ஒரு நபரால் தாக்கப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது.