சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செருப்பு வீசியது அவமானம் அல்ல என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஆனால் அதையும் மீறி போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
போட்டி நடைபெற்ற சிதம்பரம் மைதானத்தில் நாம் தமிழர் கட்சியினர் செருப்புகளை வீசியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது சம்மந்தமாக சிலர் கைது செய்யப்பட்டனர். அதே போல சாலையில் போராடிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சீமான் சந்தித்தார். அப்போது மைதானத்தில் செருப்புகளை வீசியது அவமானம் என சிலர் கூறுகிறார்களே என கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், இதில் என்ன அவமானம் இருக்கிறது? நாங்கள் அவ்வளவு கூறியும் அதை மீறி இந்த போட்டியை நடத்தியதை விட இது என்ன அவ்வளவு பெரிய அவமானமா என கூறியுள்ளார்.






