என் தந்தையை கொன்றுவிட்டார்கள் : பாலியல் வன்கொடுமை புகாரளித்த இளம்பெண் கண்ணீர்!!

574

என் தந்தையை கொன்றது போல் என் தந்தையின் சகோதரரையும் கொலை செய்வார்கள் என பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார் கூறிய பெண் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேச உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், பாலியல் வென்கொடுமை செய்ததாக கடந்தாண்டு பொலிசிடம் புகார் அளித்திருந்தார்.

ஆனால் பொலிஸார் அவரது புகாரை வாங்க மறுப்பு தெரிவித்து வந்தனர், இதனால் விரக்தியடைந்த அந்த பெண் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனைத்தொடர்ந்து அன்றிரவே விசாரணைக்காக அழைத்து சென்ற இளம்பெண்ணின் தந்தை, இறந்துவிட்டதாக மறுநாள் பொலிசார் கூறினர்.

இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட யோகி அரசு, இதில் தொடர்புடையதாக கருதப்படும் 4 பேரை கைது செய்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் இன்று கூறுகையில், என் அப்பாவைக் கொன்று விட்டார்கள், என் அப்பாவின் சகோதரரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏ அவரது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கு விசாரணையில் தலையிடுவார், எனவே எனக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என கண்ணீர்மல்க பேட்டியளித்துள்ளார்.