வவுனியா வடக்கில் சாதனைபடைத்த தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம்!!

1729

கடந்த மாதம் வெளியாகிய கபொத சாதாரண தரப் பரீட்சையில் வவுனியா வடக்கு வலயத்தை சேர்ந்த தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம் வவுனியா வடக்கு வலயத்தில் சிறந்த பெறுபேற்றைப் பதிவு செய்து ஓமந்தை கோட்டத்திற்கும், வவுனியா வடக்கு வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

அந்த வகையில் செல்வராசா கஸ்மிதா எனும் மாணவி 8A சித்திகளையும் வரலாறு பாடத்தில் B சித்திகளையும் பெற்று ஓமந்தை கோட்டத்தில் சிறந்த பெறுபேற்றைப் பதிவு செய்திருக்கிறார். அத்துடன் 52 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதுடன் பாடசாலையானது 72% சித்திகளை ஓமந்தை கோட்டத்தில் பெற்று கோட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. அத்துடன் ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திலும் 72% க்கு மேற்பட்ட சித்திகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.

இதற்காக உழைத்த பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் மாகாண கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.