பறந்துகொண்டிருந்த விமானமொன்றின் இயந்திரப்பகுதியில் திடீரென தீ பிடித்ததில் அதில் பயணம் செய்த நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தையடுத்து குறித்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இவ்வனர்த்தம் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் இடம்பெற்றுள்ளது. அனர்த்தம் ஏற்பட்டுள்ளபோது விமானத்தில் 1380 பேர் பயணித்துள்ளனர் . இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவர் கவலைக்கிடமாகவுள்ளார்.
பிலடெல்பியாவின் வடமேற்கில் இருந்து சுமார் 70 மைல் தூரத்தில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.








