அதிரடிப்படையினர் விசேட சுற்றிவளைப்பு : பலர் கைது, பல்வேறு ஆயுதங்களும் மீட்பு!!

652

கடந்த நான்கு மாதங்களாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 30 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இம்மாதம் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணங்களில் மேற்கொண்ட சுற்றி வளைப்பிலேயே இவ்வாயுதங்கள், போதைப்பொருள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் : கைக்குண்டு – 05, ரி56 ரக துப்பாக்கி – 02, ரி56 ரக துப்பாக்கி மெகசின் – 02, ரி56 ரக துப்பாக்கி ரவைகள் – 151, சுழல் துப்பாக்கி (Revolver) – 05, கைத்துப்பாக்கி (Pistol) – 01, கைத்துப்பாக்கி மெகசின் – 02, வாள் – 07, கைத்துப்பாக்கி, சுழல்துப்பாக்கி ரவைகள் – 385,  வேறு துப்பாக்கி ரவைகள் – 810, வெடிமருந்து துப்பாக்கி – 03,

இந்த ஆயுதங்களுடன், ஹெரோயின் 56 கிராம் மற்றும் ஹசிஸ் எனப்படும் போதைப்பொருள் 111 கிராம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.