8 மாத குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை : தொடரும் வன்கொடுமைகள்!!

578

இந்தியாவில் பிறந்து எட்டு மாதங்களே ஆன குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் பலூன்களை விற்று பிழைப்பு நடத்தி வரும் நபர் ஒருவர் நேற்று காலை 4.45 மணியளவில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்று, சற்று தொலைவில் உள்ள வணிக வளாகத்தின் தரைதளத்தின் கீழ் இருக்கும் தளத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்துள்ளான்.

இது தொடர்பான காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் அந்த நபர் குழந்தையை தோளில் சுமந்து கொண்டு செல்வது போன்று உள்ளதால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், அவனிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னரே முழு தகவல் தெரியவரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சமீபகாலமாக இந்தியாவில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படு இறந்து வரும் சம்பவம் பெருகி வருவதால், தற்போது இருக்கும் தாய்மார்கள் தங்கள் பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்றே தெரியவில்லை என்று புலம்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.