இலங்கையில் திடீரென தாழிறங்கிய நிலப்பரப்பு : பதறியடித்து ஓடிய மக்கள்!!

689

இலங்கையின் மலைநாட்டு பகுதியில் திடீரென நிலம் தாழிறங்கியமையால், அச்சமடைந்த மக்கள் பதறியடித்து ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது. பண்டாரவளை, லியன்கஹவெல பிரதேசத்தின் நிலப்பரப்பு திடீரென தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அச்சம் காரணமாக உடனடியாக அங்கிருந்த பல வீடுகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்ததாக, பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தாழிறக்கம் காரணமாக எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. மழை பெய்யாத நிலையில் இவ்வாறு தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமைக்காக காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

இது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காகவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள், சம்பவ இடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆபத்தான நிலைமை ஏற்பட்டுவிடும் என்ற சந்தேகத்திற்கமைய அந்த இடத்தில் உள்ள மக்களை அங்கிருந்து அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.