தெலுங்கு சினிமாவில் நடிகைகளுக்கு பிரபலங்கள் பாலியல் தொல்லை அளிப்பதாக கூறி அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர் ஸ்ரீரெட்டி. பிரபலமான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை வெளியிட்டதுடன் சில படங்களையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
தொடர்ந்து பவன் கல்யாண் இளம்பெண்களை வைத்து மசாஜ் செய்வதாகவும், பெங்காலி பெண்களையே பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு அவரது ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மிரட்டல்களும் விடுத்தனர்.
இதனால் பயந்து போன ஸ்ரீரெட்டி மன்னிப்பு கேட்டதுடன், 5 கோடி தருவதாக பின்னர் ஒருவர் இருந்து தூண்டியதால் இவ்வாறு செய்ததாகவும் கூறினார். இதனையடுத்து தாமாகவே முன்வந்து, தான் தூண்டிவிட்டே ஸ்ரீரெட்டி இவ்வாறு செய்ததாக ராம்கோபால்வர்மா கூறினார்.
இந்நிலையில் பவன் கல்யாண் டுவிட்டரில், என்னை அரசியல் ரீதியாக காயப்படுத்த ஸ்ரீரெட்டி மூலம் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் பின்னணியில் ராம்கோபால் வர்மாவும், சந்திரபாபுவின் மகனும் அமைச்சருமான லோகேசும் இருப்பதாக கூறியுள்ளார்.






