வயதில் மூத்தவர் என்பதால் தயங்கிய ஐஸ்வர்யா ராய் : அழகான காதல் கதை!!

326

 

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியரான அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் இன்று தங்களது 11 வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். தன்னை விட 2 வயதில் சிறியவரான அபிஷேக்கை, 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய்.

Dhai Akshar Prem Ke, Kuch Naa Kaho, Umrao Jaan மற்றும் Dhoom 2. ஆகிய படங்களில் இணைந்து நடித்தன் மூலம் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டிலிருந்து டேட்டிங்கில் இருந்த இவர்கள், 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

காதல் கதை

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், நடிகர் சல்மான் கானை காதலித்து அவருடன் பிரச்சனையில் சிக்கி காவல் நிலையம் வரை சென்றது உலகம் அறிந்த கதை.

சல்மானின் காதல் முறிவுக்கு பின்னர் தான் ஐஸ்வர்யாவுக்கு, அபிஷேக்கின் நட்பு கிடைத்துள்ளது. சல்மானை பிரிந்த பின்னர் கூட, அவர் கொடுக்கும் நெருக்கடியால் ஐஸ்வர்யா சிக்கி தவித்த நேரத்தில் உறுதுணையாக இருந்தது அபிஷேக் தான்.

இருவருக்குமிடையேயான நட்பு பின்னர் காதலாக மாறியது. தன்னை விட வயதில் சிறியவரான அபிஷேக்கை திருமணம் செய்துகொள்வதில், ஐஸ்வர்யா கொஞ்சம் தயங்கியுள்ளார். ஆனால், தனது தந்தை கொடுத்த அறிவுரையின் படி அபிஷேக்கை மணந்தார்.

அபிஷேன் ஒரு பேட்டியின்போது, ஐஸ்வர்யா ஒரு உலக அழகி என்பதால் அவரை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை, மாறாக அவர் மீது எனக்கு இருந்த உண்மையான காதலால் தான் திருமணம் செய்துகாண்டேன் என கூறினார்.

அதே போன்று ஐஸ்வர்யாவும், அபிதாப் பச்சன் என்ற பெரிய ஸ்டாரின் மகன் அபிஷேக் என்பதால் அவரை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை.

மாறாக, நாங்கள் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம், எங்கள் வாழ்க்கையில் அந்தஸ்தை விட அன்புதான் மேலோங்கியது, அதனால்தான் திருமண பந்தத்தில் இணைந்தோம் என கூறினார்.