நவம்பர் மாத ராசி பலன்கள் – ரிஷபம்!!

442

rishabam

பிறருடைய தவறுகளை எளிதில் மன்னிக்கும் குணமுடையவர்கள் நீங்கள். இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப் பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். ராசியாதிபதி சுக்கிரன் செவ்வாய் வீட்டில் 7ல் சஞ்சாரம் செய்வதால் வேளை தவறி சாப்பிட வேண்டியிருக்கும்.

முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும்போது கவனமாக இருப்பது நல்லது. குருவின் பார்வை ரண, ரோக ராசியின் மீது பதிவதால் உடல் ஆரோக்யம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடின உழைப்புக்குப் பின் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த வியாபாரம் வந்து சேரும். பங்குதாரர்களிடமிருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டைப் பெறுவார்கள். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். மேலிடத்தின் கனிவான பார்வை விழும்.

குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பெண்களுக்கு முக்கியமான வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்னைகளை கண்டால் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியது வரும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டிகளில் பரிசுகளை அள்ளுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி இந்த மாதம் அமையும். திட்டமிட்டபடி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

பரிகாரம் : ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வணங்குவதால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் : 7, 8, 9 திகதிகளில் புதிய ஒப்பந்தங்களில் எதிலும் கையெழுத்திட வேண்டாம்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீபிரக்ருதே நம“ என்ற மந்திரத்தை தினமும் 9 முறை கூறவும்.

சிறப்புப் பரிகாரம் : மரிக்கொழுந்து வாங்கி பெருமாளுக்குப் படைத்து வரவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : வியாழன், வெள்ளி.
தேய்பிறை  : வியாழன், வெள்ளி.