விமான பயணிகளுக்கு எச்சரிக்கை : உங்களுக்கும் இந்தநிலை ஏற்படலாம்!!

502

பிரான்சிலிருந்து அமெரிக்கா சென்ற வானூர்தியில் சாப்பிடுவதற்குக் கொடுத்த அப்பிளை கைப்பையில் கொண்டு சென்ற பெண்ணுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சிலிருந்து அமெரிக்காவுக்கு கிரிஸ்டன் டேட்லாக் என்பவர் எடெல்டா ஏர்லைன்ஸ் வானூர்தியில் பயணித்துள்ளார். வானூர்தி  தரையிறக்கப்பட்டது. இதையடுத்து வானூர்தியில் இருந்து வெளியேறிய பயணிகளிடம் பொலிஸார் சோதனை செய்யும் இடத்தில் சோதனை செய்தனர்.

குறித்த பெண் கொண்டு வந்த பைக்குள் அப்பிள் ஒன்று இருந்துள்ளது. ஆனால் அந்த அப்பிள் அவர் சாப்பிடுவதற்காக வானூர்தியில் வைத்து வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதனைச் சாப்பிடவில்லை.

சாப்பிடக் கொடுத்த அப்பிளை சாப்பிடாமல் கைப்பையில் கொண்டு சென்ற குற்றத்திற்காக அவருக்கு எதிராகப் பொலிஸார் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யதனர். நீதிமன்று அவருக்கு தண்டம் விதித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.