ஸ்டாலின் கடத்திச் சென்றாரா : பல ஆண்டுகளுக்குப் பின் பாத்திமா பாபு விளக்கம்!!

1032

பிரபல செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபுவை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடத்தி சென்றதாக பரவிய தகவலுக்கு பல ஆண்டுகளுக்கு பின் பாத்திமா பாபு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், என் வாழ்வில் அப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை, ஸ்டாலின் என்னை கடத்தியதாக சொல்லப்படும் அந்த காலகட்டத்தில் இதுகுறித்து நான் அப்போதைய குமுதம் இதழின் பத்திரிக்கையாளரான பால்யூவிற்கு விளக்கம் கொடுத்திருந்தேன்.

ஆனால் ஏனோ நான் சொன்ன விளக்கம் எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை, துர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்த போது ஒருமுறை நான் சித்திரப்பாவை எனும் தொடரில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தேன்.

துர்தர்ஷன் வழக்கப்படி சீரியல் முடியும் வரை செய்தி வாசிப்பு அளிக்கப்படவில்லை, அந்த இடைவெளியில் என்னை செய்தி வாசிப்பாளராக காண முடியாத காரணத்தால் இப்படியொரு வதந்தியை பரப்பி இருக்கிறார்கள்.

சித்திரப்பாவை தொடர் 13 வாரங்களில் முடிந்ததும் நான் மீண்டும் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்தேன். திருமணத்திற்கு முன்பே என் கணவரான பாபு தான் என்னை துர்தர்ஷன் அலுவலகத்துக்கு அழைத்து செல்வதும், வீட்டுக்கு திரும்ப அழைத்து செல்வதுமாக இருந்தார்.

அப்படியிருக்கையில் இப்படி ஒரு வதந்தி எப்படி பரவியது, பரப்பப்பட்டது என்று எனக்கு புரியவில்லை, நான் அப்போதும், இப்போதும் என்னை இவ்விஷயமாக விசாரிக்கும் எனது நண்பர்களுக்கு மேலே சொன்ன காரணத்தை தான் விளக்கமாக அளித்து வருகிறேன்.

அதை நம்புவதும், நம்பாததும் அவரவர் பாடு, ஆனால் இதன் காரணமாக ஒரு கட்சியின் செயல்தலைவராக பட்டவரின் கேரக்டரை கொலை செய்வது தவறு.

நான் விளக்கம் அளித்த பிறகும் சிலர் அதே வதந்தியை உண்மை போலக் கூறி அவரது நற்பெயருக்கு களங்க விளைவிப்பார்களானால் அதை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

என்னை பற்றி நான் சொல்வது தான் உண்மை, அதை தான் நீங்கள் நம்ப வேண்டும், அதை விட்டுவிட்டு வெளியில் பலரும் கதை கட்டுவதை போல மசாலா தடவிய கற்பனை பொய்யைத்தான் நம்புவீர்கள் என்றால், அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை, அது உங்கள் இஷ்டம், இதற்கு மேல் இதைப்பற்றி கேள்வி வந்தால் நாம் பதில் சொல்வதாக இல்லை – இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார் பாத்திமா பாபு.