தன்னை காப்பாற்றிக்கொள்ள குழந்தையின் மர்ம உறுப்பை அறுத்த மருத்துவர்!!

595

இந்தியாவில் தான் கூறிய பொய்யை மறைப்பதற்காக பிறந்த குழந்தையின் மர்ம உறுப்பை சிதைத்து கொலை செய்த மருத்துவர் தலைமறைவாகியுள்ளார். ராஞ்சியின் ஜார்கண்டில் ஜெயப்ரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் குடியாதேவி, நிறை மாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

குடியா தேவியை சோதனை செய்து அவர் வயிற்றில் வளர்ந்தது பெண் குழந்தை என்று கூறியிருக்கிறார் அங்குள்ள மருத்துவர் அனுஜ் குமார். பிரசவ வலி ஏற்பட்டபின் அனுஜ் குமாரிடம் பிரசவம் பார்த்துள்ள நிலையில், குடியா தேவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தான் கூறிய பொய்யை மறைக்க பிறந்த குழந்தையின் பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்துள்ளார். குறைபாடுள்ள குழந்தை இறந்தே பிறந்தது என்று பொய் கூறி, குழந்தையின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் அரசு மருத்துவர்கள் குழந்தையின் பிரப்புறுப்பு துண்டிக்கப்பட்டதால் இறந்ததாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அனுஜ் குமார் தலைமறைவான நிலையில், பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் குழந்தையின் பாலினத்தை அறிய விரும்பும் பெற்றோர், அனுஜ் குமாரை அணுகுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.