யாழ் நகரில் சிறைச்சாலை வாகனத்தின் மீது சற்று முன் தாக்குதல்!!

591

யாழ். சிறைச்சாலை வாகனத்தின் மீது சற்றுமுன் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் யாழ். நகரில் இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த உத்தியோகத்தர் தற்போது சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் அடையாளம் தெரியாத இளைஞர் அணியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-தமிழ்வின்-