931 பேரை கொன்று குவித்த கொடூரன் : உண்மை சம்பவம்!!

578

சீரியல் கில்லர் என்ற பெயரை கேட்டாலே அந்த நபர் 10 அல்லது 20 கொலைகள் செய்திருப்பார் என்று தான் நினைப்போம், ஆனால் இந்தியாவை சேர்ந்த நபர் 931 பேரை கொலை செய்துள்ளது நம்பமுடியாத ஒன்றாக உள்ளது.

உலகின் கொடூரமானசீரியல் கில்லார இருந்த இவனது பெயர் தக் பெஹ்ராம். டெல்லியை சேர்ந்த இவன் கர்சீப்பை வைத்து தான் கொலை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளான். பெஹ்ராம் மற்றும் அவனது கூட்டாளிகள் 200 பேர், டெல்லி – ஜபல்பூர், குவாலியர் போன்றபாதைகளின் வழியாக வணிகம் செய்ய வருபவர்களை குறிவைத்து தாக்குவார்கள்.

ஒருமெடல் பாதிக்கப்பட்ட மஞ்சள் கர்சீப்பை பயன்படுத்தி, கழுத்தை நெறித்துக் கொல்வதை இவர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். 1800-களின் தொடக்கத்தில் திடீரென சுற்றுலா பயணிகள், வீரர்கள், நாடோடிகள் உட்பட பலர் மாயமாகினர். இதனைத் தொடர்ந்தே பொலிசாருக்கு சந்தேகம் வலுத்தது. 1809-ல் கேப்டன் வில்லியம் ச்லீமேன் என்பவர் தான் இதனை விசாரணை நடத்த பணியில் அமர்த்தப்பட்டார்.

ராமோசி “Ramosi” எனும் பாஷையை பயன்படுத்தி இவர்களுக்குள் உரையாடிக் கொண்டு, வணிகர்கள் வரும் போது மஞ்சள் கர்சீப்பை கொண்டு கழுத்தை நெறித்து கொன்று, அருகில் இருக்கும் கிணறுகளில் புதைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

குறிப்பாக இவர்கள் ஒரு கொலை செய்ய திட்டமிட்டால், காளியை வழிபடுவது வழக்கம். இவர்கள் கொன்று குவிக்கும் உயிர்கள் காளியை மகிழ்விக்கும் என்பது நம்பிக்கை, அதுமட்டுமல்ல இவர்களை செய்யும்கொலைக்கு காளி உறுதுணையாக இருப்பார் எனவும் வழிபடுகின்றனர்.

இவர்களை கண்டுபிடிக்கும் நடைபெற்ற தேடுதல் வேட்டை 10 ஆண்டுகளாக தொடர்ந்தது. இறுதியில், தக் பெஹ்ரம் அவனது74-வது வயதில் 1840-ல் தான் கைது செய்யப்பட்டான். இவனுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டது