கொழும்பில் உயிரிழந்த இளைஞன் : திடீரென மாயமான 33 இலட்சம் ரூபா!!

1308

களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞனின் 33 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைககள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தெஹிவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் அணிந்திருந்த 33 லட்சம் பெறுமதியான நகைகளை வைத்தியசாலை ஊழியர்கள் எடுத்து மேசை ஒன்றின் மீது வைத்துள்ளனர். எனினும் அவை திடீரென காணாமல் போயுள்ளமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் நகைகள் காணாமல் போயுள்ளதாக இளைஞனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைஞனின் கழுத்தில் இருந்த சங்கிலி, பென்டன், கைச்சங்கிலி ஆகியவைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன.

மோட்டார் சைக்களிலில் சென்று கொண்டிருந்த போது தெஹிவளையில் வைத்து விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். பின்னர் அவசர அம்பியுலன்ஸ் சேவை ஊடாக அவர் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் களுபோவில வைத்தியசாலையில் வைத்து அவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.