தந்தையின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிய சிறுமி!!

291

abuseமகாராஷ்டிராவில் தந்தையின் பாலியல் சில்மிஷங்களை தாங்க முடியாத 13 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் காசர்வாதவலியில் உள்ள சாய்நாத் குடிசை பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை யாரோ கடத்தி விட்டார்கள் என்று கடந்த 31ம் திகதி பொலிசில் சிறுமியின் தாய் புகார் கொடுத்தார்.

அவரது புகாரின்பேரில் பொலிசார் விசாரணை நடத்தியதில் கடந்த 2 ஆண்டுகளாக சிறுமி தனது 40 வயது தந்தையால் பாலியல் கொடுமைக்கு ஆளாகியதும், அதை தாங்க முடியாமல் அவராக வீட்டை விட்டு வெளியேறியதும் தெரிய வந்தது.

இதையடுத்து பொலிசார் சிறுமியின் தந்தையை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.