வவுனியாவில் பேரூந்திலிருந்து கேரள கஞ்சா மீட்பு : சந்தேக நபருக்கு பொலிஸார் வலைவீச்சு!!

624

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே நேற்றைய தினம் பேரூந்திலிருந்து கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனை நோக்கி பயணித்த பேரூந்தில் கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனையிட்ட சமயத்தில் 1கிலோ 820 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும் சந்தேகநபர் எவரையும் பொலிஸார் இது வரை கைது செய்யவில்லை

கேரள கஞ்சாவினை பேரூந்தில் வைத்த நபர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகபொலிஸார் தெரிவித்தனர்.