வவுனியா கோவிற்குளம் சமனங்குளம் பகுதியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட இரு குடும்பத்தினருக்கு ‘வவுனியா பசங்க’ அமைப்பினரினால் நேற்று (02.05.2018) உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியா பசங்க அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிக்கிணங்க ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நடராஜா சிவகுமார் அவர்களின் நிதியில் இரு குடும்பத்தினருக்கும் ரூபா 6500 பெறுமதியான இரு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளும் சிறு தொகைப் பணமும் வழங்கி வைக்கப்பட்டது.
இச் செயற்றிட்டத்தில் வவுனியா பசங்க அமைப்பின் தலைவர் பா.கதீஷன், தமிழ்த் தாய் இளைஞர் கழகத்தின் தலைவர் வ.பிரதீபன், அக் கிராமத்தின் சமூக சேவையாளர் கேதீஸ்வரன் தர்சினி, ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கை வந்த நடாராஜா சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறான பலர் ஒரு வேளை உணவிற்கு கூட வழியின்றி தவிக்கின்றனர். புலம்பெயர் உறவுகளை உதவ முன்வருமாறு வவுனியா பசங்க அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
வவுனியா பசங்க அமைப்பினர் தொடர்புகளுக்கு – 077 266 1413










