அமெரிக்காவில் ஒருதலையாக காதலித்து வந்த நபர், அப்பெண்ணின் காதலனை கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் கெவின் பிரசாத். அங்கே பணிபுரிந்த நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீது கெவினுக்கு காதல் மலர்ந்துள்ளது, இதை அவரிடம் கூறாமல் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இருவரும் நட்பாக பழகிய நிலையில், வெளியில் செல்ல பலமுறை அழைத்தும் நிஷா வரவில்லை என தெரிகிறது.
தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்த கெவினுக்கு கோபமாக பதிலளித்த நிஷா, தனக்கு மூன்று வயதில் குழந்தை இருப்பதாகவும், மார்க் என்பவருடன் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு ஷாக்கான கெவினால் நிஷாவை மறக்கமுடியவில்லை.
சில நாட்களில் தன் காதலனுடன் லாஸ் வேகாஸில் தங்கவிருப்பதாகவும், இதனால் வேலையை விட்டு நிற்கப் போவதாகவும் நிஷா கூறியுள்ளார். அப்போது மார்க்கை அழைத்து வந்து கெவினுக்கு அறிமுகமும் செய்து வைத்ததுடன், இதுதான் கடைசி சந்திப்பு என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த கெவின், தன் நண்பர் ரிவெரா என்பவரை அழைத்துக் கொண்டு மார்க்கின் காரை பின்தொடரட்ந்துள்ளனர். சுமார் 20 கி.மீவரை பின்தொடர்ந்த நிலையில், ஒரு இடத்தில் கார் நிற்க மார்க்கை மாறுவேடத்தில் இருந்த கெவின் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தியதில் கெவின் மீது சந்தேகம் இருப்பதாக நிஷா கூற, உண்மைகள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து கெவின் மற்றும் ரிவேராவை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.






