முல்லைத்தீவு இளங்கோபுரம் காட்டுப்பகுதியில் ஒரு தொகுதி யுத்த வெடிபொருட்கள இன்று மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து பொலிஸாரும் அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கையில் இன்று பிற்பகல் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது 737 மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுகள் கனரக துப்பாக்கி ரவைகள் மற்றும் ஆர்.பி.ஜிஇ துப்பாக்கி செலுத்திகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.






