முள்ளிவாய்க்கால் பகுதியில் குண்டு வெடிப்பு!!

806

 

முள்ளிவாய்க்கால் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் இன்று இரவு தீ மூட்டப்பட்டதன் காரணமாக அந்தப் பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக அந்தப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்று இரவு 8.00 மணியளவில் முள்ளிவாய்கால் மேற்கு பகுதி பனங்கூடல் ஒன்றிற்குள் திடீரென தீ எரிந்ததாகவும் அதே சமயம் யுத்த வெடிபொருட்கள் சில வெடித்துச் சிதறியதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மேலும் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்ததின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இன்னமும் அகற்றப்படாமல் அங்கங்கே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-