கவலைப்படாதே நான் திருமணம் செய்கின்றேன் : நம்பிச் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!

575

தமிழகத்தில் இளம் பெண்ணை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரியை சேர்ந்தவர் கவிதா. கணவரால் கைவிடப்பட்டவரான இவரின் தந்தை இறந்துவிட்டார். தாயார் வாய் பேசமுடியாதவர். இந்நிலையில் தனது தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அந்த மருத்துவமனையில் இருந்த ரஞ்சித் என்ற இளைஞர் கவிதாவின் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் பின் அவரில் செல்போனிலிருந்து அவருக்கு தெரியாமல் இவருடைய போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.

அதன் பின் அவரிடம் பேச ஆரம்பித்த நண்பராகியுள்ளார். கணவரால் கைவிடப்பட்டவர் என்பதை அறிந்தவுடன் ரஞ்சித் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன், பயப்படாதே என்று ஆசைவார்த்தைகள் எல்லாம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து தாத்தாவின் சிகிச்சை முடிந்ததால், கவிதா தர்மபுரிக்கு சென்றுள்ளார்.

தர்மபுரியில் இருந்த கவிதாவை தொடர்பு கொண்ட ரஞ்சித் சேலத்திற்கு வருமாறு அழைத்துள்ளான். அவர் வர மறுப்பு தெரிவித்த போதும்,

ஒரே ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் எனக்கூறி அழைத்துள்ளான் ரஞ்சித். உடனே திரும்பி விடுவேன் என்று நிபந்தனை விதித்து வந்துள்ளார் கவிதா.

நேரில் வந்த அவரை அழைத்துக்கொண்டு பூங்கா, சுற்றுலாத்தளம் என சுற்றியுள்ளான் ரஞ்சித். இப்படியே இரவு ஆகும் வரை கவிதாவை அங்கும் இங்குமா பொய்களைக் கூறி அழைத்துக்கொண்டு சுற்றியுள்ளான். பின்னர் இரவு ஆன பின்பு பிறகு வீடு செல்ல வேண்டாம், இரவு தங்கிவிட்டு காலையில் செல்லுமாறு தெரிவித்துள்ளான்

தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்த ரஞ்சித் அதன் பின் தன் நண்பர்கள் நபீஸ் மற்றும் நைவீன் மாலிக் ஆகியோருக்கு தொடர்பு கொண்டு குறித்த விடுதிக்கு வரும்படி அழைத்துள்ளான்.

அவர்கள் வந்த பின்பு தங்களுடைய ஆசைக்கு இணங்கும் படி ரஞ்சித் வற்புறுத்திய பின்பு தான் கவிதாவிற்கு புரிந்தது, இவன் தன்னை காதலிக்கவில்லை, தன் உடம்பை மட்டுமே அடைய இப்படி செய்துள்ளான் என்று, அவர்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவர்கள் உடனடியாக மதுவில் மயக்க மருந்தை கொடுத்து கவிதாவை கட்டாயாப்படுத்தி வாயில் மதுவை ஊற்றியுள்ளனர்.

மயங்கிய அவரை இந்த மூன்று பேரும் கூட்டாக வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து கவிதா அடுத்த நாள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், பொலிசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.