காதலனுடன் இறுதிப் பயணம் சென்ற பாடசாலை மாணவி : படங்கள் இணைப்பு!!

280

 

பண்டுவஸ்நுவர – இரத்முலுகந்தயில் காதல் ஜோடி பயணித்த உந்துருளியொன்று பள்ளத்தில் வீழ்ந்து இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 17 வயதான பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத வேளை, 18 வயதான காதலன் அவரை தனது உந்துருளியில் விகாரை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். குறித்த இளைஞரின் நண்பர்களும் அவர்களுடன் சென்றுள்ளனர். இதன்போது அதிக சரிவை கொண்ட வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையே உந்துருளி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

எனினும் இதனை அவதானிக்காத நண்பர்கள் சற்றுதூரம் சென்ற பின்னர் இவர்களை காணாது தேடியுள்ளனர். இதன்போது அவர்கள் இருவரும் பயணித்த உந்துருளி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதை அவதானித்துள்ளனர்.

பின்னர் குறித்த காதல் ஜோடியை குளியாபிட்டிய மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 18 வயதான இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.