யாருமில்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த இளைஞர்கள் செய்த மோசமான காரியம்!!

2352

திருகோணமலை – நிலாவெளி பகுதியில் வீடொன்றினை உடைத்து நகைகள் மற்றும் பணத்தினை திருடிய மூவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நிலாவெளி, இக்பால் நகர் மற்றும் ஆக்குளம் பகுதிகளைச் சேர்ந்த 25, 23 மற்றும் 24 வயதுகளுடைய மூன்று இளைஞர்களையே கைது செய்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் கூறியுள்ளனர்.

யாருமில்லாத நேரத்தினை அவதானித்து குறித்த வீட்டினை உடைத்து புகுந்து 2 பவுன் தங்க நகையினையும், ஒரு இலட்சம் ரூபா பணத்தினையும் திருடியுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இளைர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதோடு இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார்