வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் நேற்று (09.05.2018) மாலை 4 மணியளவில் கேரள கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிக்கும் பேரூந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனையிட்ட சமயத்தில் 2கிலோ 72 கிராம் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 35 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்ற பேரூந்தினை நேற்று மாலை வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்ட சமயத்தில் 2 கிலோ கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை
மேலதிக விசாரணைகளின் பின்னர் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவினையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





