வவுனியாவில் தந்தையின் வாகனத்திலேயே மோதி பலியான சிறுமி : அதிர்ச்சி சம்பவம்!!

1286

 

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் தந்தையின் வாகனத்தில் மோதி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை பகுதியில் உள்ள சுதர்ஷன் நேற்றைய தினம் (09.05.2018) காலை தனது ஐந்து வயது மகளான ருஷா என்பவரை முன்பள்ளி பாடசாலைக்கு தனது கயஸ் ரக வாகனத்தில் ஏற்றி சென்று இறக்கிய சமயத்தில் தனது மகள் வாகனத்தின் முன் பக்கமாக கடப்பதை அவதானிக்காத தந்தை வாகனத்தை முன் நோக்கி நகர்த்திய போது மகள் மீது வாகனத்தை மோதியுள்ளார்

இதில் படுகாயமடைந்த சிறுமி வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.