முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயம்!!

617

 

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி, கம்பளை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி, பத்துனுப்பிட்டிய புகையிரத கடவைக்கு அருகில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.