வவுனியாவில் அரியவகை வலம்புரி சங்குடன் இரு இளைஞர்கள் கைது!!

803

கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளைக்கு சென்று இருவர் வவுனியா நொச்சிமோட்டை பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். வலம்புரி சங்குகை விற்பனைக்காக தம்புள்ளைக்கு எடுத்துச் சென்ற இரு சந்தேகநபர்களே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவின் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கார் ஒன்றை சோதனையிட்ட பொலிஸார் அதில் வலம்புரி சங்குடன் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியை சேர்ந்த இந்த சந்தேக நபர் தம்புள்ளையில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு ஒன்றரை கோடி ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக இந்த வலம்புரி சங்கை கொண்டு சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த 24 மற்றும் 21 வயதான இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வவுனியா நீதவான நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர். வவுனியா பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.