நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் : மயிரிழையில் விபத்து தவிர்ப்பு!!

1239

 

இந்தியாவில் இரண்டு விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோத இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 2ஆம் திகதி, இண்டிகோ விமானம் ஒன்று கொல்கத்தாவில் இருந்து அகர்தாலா நகருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அகர்தாலாவில் இருந்து கொல்கத்தாவுக்கு ஏர் டெக்கான் விமானம் வந்து கொண்டிருந்தது.

இந்த இரண்டு விமானங்களும், வங்கதேச தலைநகர் டாக்கா வான்பகுதியில் நேருக்கு நேர் வந்தன. மிகவும் நெருங்கி வந்ததால், இரண்டு விமானங்களிலும் அபாய ஒலி எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, விமான நிலைய Control Room-யில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் விமானிகள் பரபரப்பாகினர். பின்னர், விமானத்தின் பறக்கும் உயரம் உடனடியாக மாற்றியமைக்கப்பட்டது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.