மிகவும் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் மட்டக்களப்பு மக்கள்!!

484

 

மட்டக்களப்பு – கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிண்ணையடி கிராமத்தின் துறையடிக்கு பாதை ஒன்றை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிண்ணையடிக் கிராமத்திற்கும், கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்கும் இடைப்பட்ட பின்தங்கிய கிராமங்களான முருக்கன்தீவு, சாராவெளி, பிரம்படித்தீவு, கிராமம் ஆகியவற்றை இணைக்கும் துறையடிக்கு பாலம் ஒன்றை அமைக்குமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிண்ணையடிக்கும் முருக்கன்தீவிற்கும் இடையிலான ஆற்றின் இடைவெளி 200 மீற்றர் தூரம் காணப்படுகின்றது. இதனை கடக்க முடியாது போனால் மக்கள் 10 கிலோ மீற்றர் தொடக்கம் 15 கிலோ மீற்றர் தூரம் சுற்றியே தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதனால், அப்பகுதி மக்கள் , பெண்கள், விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, ஆற்றை கடப்பது மிகவும் ஆபத்தான பயணமாகவுள்ளதாகவும், மிகவும் பாரிய சவாலை எதிர்நோக்குவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, காலம் காலமாக எமது பிரதேசத்திற்கு வரும் அரசியல்வாதிகள் இவ்வாற்றை பார்வையிட்டு இவ்வாற்றுக்கான பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனக் கூறிச் செல்கின்றார்கள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் கூறியுள்ளனர்.

எனவே இப்பிரதேசத்தில் உடனடியாக பாலம் அமைக்கப்படா விட்டாலும் பரவாயில்லை மக்கள் அச்சமில்லாமல் ஆற்றைக் கடப்பதற்கு நல்ல முறையிலான பாதை ஒன்றினை பெற்றுத் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

எனவே நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றாத வகையில் பாலங்களை அமைத்து தருவதற்கு மாவட்ட அரசியல்வாதிகள் கூடிய கவனம் செலுத்தி நடவடிக்கையை துரித கதயில் மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எனவே ஒவ்வொரு வருடமும் இப்பாலம் அமைத்து தரப்படும் என்று மக்களின் பொய்யான வாக்குறுதிகளை வழங்காமல் அதனை செயல் வடிவில் காட்டுவதற்கு அரசியல் தலைமைகள் முன்வருவார்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.