வவுனியா சிறச்சாலையில் கைதி மீது தாக்குதல்!!

611

வவுனியா விளக்கமறியில் சிறைச்சாலையில் இன்று (14.05) காலை கைதி ஒருவர் மீது சிறைக்காவலர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சிறைக்கைதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலம் தெரியவருகையில்,

வவுனியா சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட சிறைக் கைதி ஒருவரிடம் சிறைக்காவலர்கள் இன்று சிறைக்கு வெளியே இருந்து பொதி ஒன்று கிடைத்துள்ளதாகத் தெரிவித்து அது என்ன பொதி என்று கேட்டே குறித்த சிறைக் கைதியை தாக்கியுள்ளனர். இதில் படுகாமடைந்த சிறைக் கைதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைக்கைதி சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் 32வயதுடைய சிறு குற்றம் ஒன்றுக்காக சிறைவாசம் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.