முன்முறையாக இரு கால்களையும் இழந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உலக சாதனை!!

379

உலகின் அதி உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், இரு கால்களையும் இழந்த சீனாவைச் சேர்ந்த சியா போயு என்ற 70 வயது முதியவர் ஏறி சாதனை படைத்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த சியா போயு மலையேறும் வீரராவார். இவர் கடந்த 40 வருடங்களுக்கு முன்னர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் தனது 2 கால்களையும் இழந்துள்ளார்.

70 வயதான இவர் தற்போது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளார். இதன் மூலம் 2 கால்கள் இல்லாமல் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் , உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சியா போயுவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.