வவுனியாவில் எரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு கோரி சுவரொட்டிகள்!!

605

 

சமீபத்தில் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட எரிபொருள்களுக்கான விலையை உடனடியாகக் குறைக்குமாறும் கோரும் சுவரொட்டிகள் வவுனியா நகர பிரதேசங்கள் கிராமப்புறங்கள் தோறும் இன்றைய தினம் (17.05) வியாழக்கிழமை அதிகாலை முதல் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது

மக்கள் விடுதலை முன்னணி என்று உரிமை கோரப்பட்டுள்ள அந்தப் பிரசுரத்தில் எரிபொருள்களுக்காக அநீதியான முறையில் உயர்த்தப்பட்ட விலையை உடனடியாகக் குறைத்து விடு’ என்று அரசைக் கோரும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

எரிபொருளுக்கான அதிகரித்த திடீர் விலையேற்றம் அனைத்துப் பொருட்களுக்குமான மறைமுக விலையேற்றத்திற்குக் காரணமாக அமைந்து விடும் என்பதால் இந்த விலையேற்றம் மக்களிடம் அதிருப்தியைத் தோற்றுவித்திருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.