டுபாய்க்கு வேலைக்கு சென்ற கணவரின் நிலை என்னவென்றே தெரியாத நிலையில் மனைவி உருக்கமான வேண்டுகோளை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த சந்தியா என்ற பெண் உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், என் கணவர் பெயர் நிர்மல், துபாய்க்கு வேலை தேடி ஒரு மாதம் முன்னர் அவர் போனார்.
அங்கு அவருக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்த நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் என்னிடம் பேசினார். அதன்பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து என் கணவர் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ரஹ்மானுக்கு போன் செய்தேன்.
அவரிடம் என் கணவர் நிர்மல் குறித்து கேட்ட போது, அவர் தற்கொலை செய்து கொண்டார் என கூறினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை, என் கணவரை கண்டுப்பிடிக்க துபாயில் உள்ள தமிழர்கள் உதவ வேண்டும் என உருக்கமான கோரியுள்ளார்.





