யாழில் பெண்ணொருவருக்கு நடந்த கொடுமை!!

506

யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரின் தங்க சங்கலியை திருடர்கள் அதிரடியாக அபகரித்துச் சென்றுள்ளனர். மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த குடும்பப் பெண்ணை இடைமறித்த திருடர்கள் வாள்களைக் காட்டி அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.

நல்லூர் முடமாவடி வீதியால் நேற்று பயணித்த குறித்த குடும்பப் பெண்ணை மோட்டார்ச் சைக்கிள் ஒன்றில் வருகை இருவர் இடைமறித்துள்ளனர்.

வாள்களைக் காட்டிக் குறித்த பெண்ணை அச்சுறுத்திய திருடர்கள் அவரை கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுண் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். குறித்த பெண்ணின் மோட்டார்ச் சைக்கிளை நிலத்தில் தள்ளி விழுத்தியும் அட்டகாசம் செய்துள்ளனர்.

பட்டப்பகலில் வாள்களைக் காட்டித் திருடர்கள் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்றமை யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.