இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பேஸ்புக்!!

639

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையினை பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கில் “பாதுகாப்பை உறுதி செய்தல் (Saftey Check)” முறையை தற்போது பேஸ்புக் செயற்படுத்தியுள்ளது.

அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்கள் பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அறிந்து கொள்வதற்காக இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது.

உலகளாவிய ரீதியில் ஏற்படும் அனர்த்தங்களின் போது, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 2015ம் ஆண்டு முதல் இந்த நடைமுறையை பேஸ்புக் நிறுவனம் அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.