விளையாட்டாக கிங் கங்கையில் குதித்த பாடசாலை மாணவரொருவர் காணாமல் போயுள்ளதாக வென்னப்புவ காவற்துறை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
17 வயதுடைய வென்னப்புவ – லுணுவில பிரதேசத்தை சேர்ந்த மாணவரொருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இத்தினங்களில் நிலவும் சீரற்ற காலநிலையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கை பார்ப்பதற்காக மேலும் சிலருடன் இணைந்து குறித்த மாணவர் சென்றுள்ளார்.
பின்னர் , குறித்த மாணவர் திடீரென நீரில் குதித்துள்ளதை தொடர்ந்து மாணவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் , குறித்த மாணவர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.





