கணவர் கண் எதிரே மனைவிக்கு நடந்த கொடுமை!!

456

இந்தியாவில் கணவர் கண் எதிரே மனைவியை மந்திரவாதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி குழந்தை பிறக்க உதவ கோரி ஹவுராவில் உள்ள ரஹ்மத் அலி ஷேக் என்ற மந்திரவாதியை நாடியுள்ளனர்.

அங்கு கணவனை தூணில் கட்டி வைத்து விட்டு மனைவியை அவர் கண் எதிரிலேயே ரஹ்மத் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தம்பதியிடம் இருந்த நகை மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு அவர்களை விரட்டி விட்டார்.

இது குறித்து அவர்கள் பொலிசாரிடம் புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் ரஹ்மத்தை கைது செய்தனர்.

ரஹ்மத் பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், அந்த தம்பதியினருக்கு உதவி செய்வதற்காக தான் அப்படி செய்ததாகவும், அவர்கள் சம்மதத்தின் பேரிலேயே இது நடந்தது எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.