திருமணநாளில் தற்கொலை செய்து கொண்ட புதுமாப்பிள்ளை!!

457

தமிழ்நாட்டில் திருமணம் நடக்கவிருந்த நாளில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் விக்னேஷ் (25). மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் சென்னையில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே விக்னேசுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.

திருமணத்தையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே சென்னையில் விடுப்பு எடுத்து புது மாப்பிள்ளை விக்னேஷ் ஊருக்கு வந்தார். திருமணம் நடப்பதையொட்டி நேற்று ஊரில் உள்ள தனது நண்பர்களை வரவழைத்து பார்ட்டியும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கொடுமுடி ரெயில்வே தண்டவாள பகுதியில் விக்னேஷ் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தகவலறிந்த பொலிசார் விக்னேஷின் சடலத்தை கைப்பற்றியுள்ளார்கள்.

அவர் தற்கொலை செய்ய காரணம் என்ன? திருமணம் பிடிக்கவில்லையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.