வவுனியாவில் மனிதஉரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பயிற்சிப் பட்டறை!!

313

வவுனியாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பயிற்சி பட்டறை ஒன்று நேற்று (26.05) வடமாகாண மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் கே.செபஸ்ரியன் தலைமையில் நடைபெற்றது.

இப்பயிற்சிப் பட்டறையானது வவுனியா பரிசுத்த ஆவியானவர் தேவாலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் சங்கங்கள், ஆசிரியர், மாணவர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.