வாய்த்தகராறு கொலையில் முடிந்த அவலம்!!

520

கிரிந்திவெல்ல – முதுன்பிட்டிகந்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவர் இடையே ஏற்பட்ட வாயத்தகராறு அதிகரித்து நேற்று மாலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தில் முதுன்பிட்டிகந்த – ரதாவான பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான குடும்பஸ்தரே கொல்லப்பட்டுள்ளார்.

கொலை செய்த நபர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சடலம் தொடர்பான பிரேத பரிசோதானை இன்று இடம்பெறவுள்ளது.