இயக்குனர் களஞ்சியம் அவதூறு வழக்கு: நடிகை அஞ்சலி கைதாவாரா?

272

anjaliகற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி, அங்காடித்தெரு படத்தின் மூலம் புகழ் பெற்றார். பல்வேறு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த அவர் வளசரவாக்கத்தில் சித்தி பாரதிதேவியுடன் தங்கியிருந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றார்.

கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு திடீரென வெளியேறிய அஞ்சலி, சென்னையில் உள்ள பத்திரிகை நிருபர்களை போனில் தொடர்பு கொண்டு பேசி டைரக்டர் களஞ்சியம், சித்தி பாரதிதேவி ஆகியோர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.

இருவரும் சேர்ந்து என்னை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு களஞ்சியம்தான் பொறுப்பு என்றும் அஞ்சலி கூறியிருந்தார்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த களஞ்சியம், அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்ததுடன், சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத அஞ்சலிக்கு கடந்த மாதம் 29ம் திகதி ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நடிகை அஞ்சலி தற்போது ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஜெகனாப்பேட்டை என்ற இடத்தில் வசித்து வருகிறார். இந்த பகுதி, ராசுல் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்டதாகும்.

இதையடுத்து, சைதாப்பேட்டை கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டு நகல் ராசுல் போலீஸ் நிலையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் களஞ்சியத்தின் வக்கீல் ஜெயபிரகாஷ் இதனை தெரிவித்தார்.

இதற்கிடையே கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக அஞ்சலி கோர்ட்டில் சரண் அடைய முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது. எனவே விரைவில் அவர் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக பரபரப்பின்றி காணப்பட்ட அஞ்சலி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள