வவுனியாவில் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

606

வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளரின் இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்யக்கோரி இன்று (30.05.2018) பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட விவசாயப் பணிமனையிலிருந்து பேரணி ஆரம்மாகி மணிக்கூட்டு வீதி வழியாக புதிய பேருந்து நிலையம் சென்று அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராகவும் வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். வவுனியாவில் கடமையாற்றிய மாவட்ட விவசாயப் பணிப்பாளரை அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராகவே இன்றைய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் விவசாயிகள் மூங்கில் செய்கையினால் எதிர்கொள்ளும் விளைவுகளை சித்தரிக்கும் வீதி நாடகமும் இடம்பெற்றது.

இப்போராட்டத்தில் டெலோ அமைப்பின் நகரசபை உறுப்பினர் சந்திரபத்மன், புளெட் அமைப்பின் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் சிவம், அமுதம் விவசாய அமைப்பு, இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை தேசிய அரச பொது ஊழியர்கள் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.