கனடாவில் வாழ்வதாக கூறி கொழும்பில் பாரிய மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான தேவகே இஷாரா தினெக்ஷி என்ற பெண்னே கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக கூறி பெண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கும் குறித்த பெண்ணை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான இந்த பெண் கொழும்பு மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகளில் தங்கம் மற்றும் பணம் கொள்ளையடித்த குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த பெண், குழுக்களுடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த பெண் கனடாவில் தங்கியிருப்பதாக கூறியே இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளார். தான் அரச சார்பற்ற அமைப்பில் சேவை செய்வதாக தெரிவித்து தம்புள்ளை இனாமழுவ பிரதேசத்தில் பெண் ஒருவரை ஏமாற்றி அவரிடம் பணம் மற்றும் நகைகளை திருடியுள்ளார்.
கனடாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நிதி அமைப்பின் தலைவரை சந்திப்பதற்காக கூறி அழைத்து சென்றே அவரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
அவரிடம் இருந்து மோசடியான முறையில் பெற்றுக் கொண்ட தங்க சங்கிலியை அடகு வைத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.





