வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்று(31.05) காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரை அடையாள பணிப்பறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டனர்.
கடந்த வாரம் வவுனியா நகரசபை தலைவருக்கு வவுனியா சிறைச்சாலையின் பாதுகாவலரினால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கண்டனமும் அடையாள வேலை நிறுத்தமும் இன்று நகரசபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு ஆதரவாக செட்டிகுளம் பிரதேச சபை, நெடுங்கேணி பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, சிங்கள பிரதேச சபை ஆகியன தமது ஆதரவினையும் வழங்கியிருந்தனர்.
10 மணியளவில் அடையாள போராட்டத்தினை மேற்கொண்ட பின்னர் தமது கடமைகளுக்கு ஊழியர்கள் சென்றதை அவதானிக்க முடிந்தாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


















