சிறுமியின் கையை பிடித்த இளைஞருக்கு நேர்ந்த கதி!!

687

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரின் கையை பிடித்திழுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்று மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய், வாத்தியாகம பகுதியைச் 27 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்ததாக சிறுமியின் பெற்றோர் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.