ஆக்ரோஷமாக சீறிய பாம்பு : தன்னுயிரை தியாகம் செய்து எஜமானை காப்பாற்றிய நாய்!!

560

தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் எஜமானரை காப்பாற்றுவதற்காக சீறிய நல்லபாம்புடன் சண்டையிட்டு நாய் உயிரிழந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளாங்குடியை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் தனது வீட்டில் 3 நாய்களை வளர்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று அனைவரும் தூங்க செல்கையில் வழக்கத்திற்கு மாறாக நாய்கள் குரைக்க ஆரம்பித்தன.

இதனைப்பார்த்த நாகேந்திரன் வீட்டினர் வெளியில் வந்துள்ளனர். அப்போது நல்லபாம்பு ஒன்று படமெடுத்தபடி ஆக்ரோஷத்துடன் சீறிக்கொண்டிருந்தது. இதனைப்பார்த்து நாகேந்திரன் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தபடி நின்றனர்.



ஆனால், நாய்கள் துரத்திசென்று பாம்பை கடிக்க ஆரம்பித்தன. பதிலுக்கு பாம்பும் நாய்களுடன் மல்லுக்கட்டியது. சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்த சண்டையில், பாம்பு இறந்துபோனது. மேலும் இரண்டு நாய்களுக்கு பாம்பு கொத்தியதில் அதிக காயம் ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.

ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு நாய் இறந்துவிட்டது. தனது எஜமானரை காப்பாற்றுவதற்காக தன்னுயிரை தியாகம் செய்த நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.